அருட் தந்தை சிறில் காமினி அடிகளார் இன்று 3 ஆவது நாளாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் வழங்க ஆஜராகியுள்ளார்.
அருட் தந்தை சிறில் காமினி அடிகளாரை இன்று காலை 9.30 மணிக்கு மூன்றாவது நாளாக வாக்கு மூலம் அளிப்பதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வருமாறு சி.ஐ.டி.யினர் அழைப்பு விடுத்திருந்த நிலையிலேயே அவர் இன்று ஆஜராகியுள்ளார்.
வெபினார் ' (இணையத்தள சந்திப்பு) இல் நடத்தப்பட்ட கலந்துரையாடலொன்றின்போது அரச புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் சுரேஷ் சாலே குறித்து அருட் தந்தை சிறில் காமினி அடிகளால் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் விசாரிப்பதற்காக கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்கள் வாக்கு மூலம் அளிப்பதற்காக அருட் தந்தை சிறில் காமினி சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 15 மற்றும் 16 ஆகிய இரு தினங்களில் மொத்தமாக 16 மணித்தியாலங்கள் அருட் தந்தை சிறில் காமினி சி.ஐ.டி.யினருக்கு வாக்கு மூலம் அளித்திருந்தார்.
இந்நிலையில், மூன்றாவது நாளாக இன்றைய தினமும் அருட் தந்தை சிறில் காமினியிடமிருந்து வாக்கு மூலம் பெற்றுக்கொள்வதற்காக சி.ஐ.டி.யினர் மீண்டும் அழைத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM