விருந்துபசார நிகழ்வினை சுற்றிவளைத்த பொலிஸார் ; போதைப்பொருளுடன் 12 பேர் சிக்கினர்

Published By: Vishnu

22 Nov, 2021 | 09:38 AM
image

மாத்றை, வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் விருந்துபசார நிகழ்வினை சுற்றிவளைத்த பொலிஸார் போதைப்பொருளுடன் 12 நபர்களை கைதுசெய்துள்ளனர்.

இந்த விருந்துபசார நிகழ்வு ஆன்லைனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேகநபர்களிடம் இருந்து கொக்கெய்ன், ஐஸ், கேரளா கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

கைதான சந்தேக நபர்கள் அம்பாறை, தல்பே, மெதகம, மாத்தறை, தனமல்வில, திஸ்ஸமகாராமை மற்றும் கோனபீனுவலை பகுதிகளைச் சேர்ந்த 30 முதல் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவர்.

சந்தேக நபர்கள் மாத்தறை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், நவம்பர் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44