அமைச்சரவையில் பூனைகளாக உள்ளவர்கள் வெளியில் சிங்கங்களாக மாறுகின்றனர் - ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி

Published By: Digital Desk 4

21 Nov, 2021 | 10:03 PM
image

(ஆர்.யசி)

அரசாங்கத்தில் விமரசனங்கள் இருக்கலாம், அவற்றை அரசாங்கத்திற்குள் தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர அரசாங்கத்தை பலவீனப்படுத்தக்கூடாது. எனினும் அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளவே பங்காளிக்கட்சிகள் சில முயற்சிக்கின்றன என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் தெரிவிப்பதுடன், அமைச்சரவையில் பூனைக்குட்டிகள் போல் இருந்துவிட்டு வெளியில் சிங்கமாக மாறுவதற்கு  சிலர் முயற்சிக்கின்றனர் எனவும் விமர்சனக் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

Articles Tagged Under: ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி | Virakesari.lk

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளுக்கும் அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் தொடர்ச்சியாக கருத்து முரண்பாடுகள் காணப்பட்டு வருகின்ற நிலையில், அவர்களின் வெளிப்படையான கருத்து மோதல்கள் பாராளுமன்ற விவாதங்களின் போதும், போது ஊடக சந்திப்பு மேடைகளிலும் இடம்பெற்று வருகின்றது. 

இந்நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிரேஷ்ட உறுப்பினர்கள் அண்மையில் பிரதமரிடம் சில காரணிகளை முன்வைத்திருந்த நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பின் வரிசை உறுப்பினர்களின் வாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  தெரிவித்திருந்தனர்.

எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பின்வரிசை உறுப்பினர்கள் தொடர்ந்தும் ஆளுந்தரப்பு பங்காளிக்கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருவதுடன் அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறும் வலியுறுத்தியுள்ளனர். 

இது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கூறுகையில் :- 

அரசாங்கத்தில் சில தவறுகள் இடம்பெறுவது குறித்தும் நாமும் முரண்படுகின்றோம். ஆனால் அவற்றை உடனடியாக திருத்திக்கொள்ள அரசாங்கத்தில் உள்ள மேலிடத்திற்கு முறையாக கொண்டு சேர்க்கின்றோம். மாறாக வெளிப்படையாக விமர்சித்து அரசாங்கத்தை பலவீனப்படுத்த நாம் முயற்சிக்கவில்லை.

ஆனால் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகள் அரசாங்கத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்பட்டு வருகின்றனர். அரசாங்கத்தில் பேசவேண்டிய விடயங்களை வெளியில் பிரசித்திபடுத்தி அரசாங்கத்தை வீழ்த்தும் சூழ்ச்சியை முன்னெடுத்து வருகின்றனர்.

அமைச்சரவையில் பூனைகள் போன்று அமர்ந்துகொள்ளும் ஒரு சிலர் வெளியில் சிங்கங்கள் போன்று கர்ச்சித்துக்கொண்டுள்ளனர். 

தவறுகள் முரண்பாடுகள் இருப்பின் அவற்றை அமைச்சரவையில் பேசி தீர்க்க வேண்டும். அதை விடுத்து வெளியில் கூறுவது மிக மோசமான அரசியல் நாகரீகம். இவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்பதையே நாமும் வலியுறுத்திக்கொண்டுள்ளோம். அரசாங்கத்தை குழப்பும் நபர்கள் வெளியேறினால் எம்மாலும் தூய்மையான அரசாங்கத்தை கொண்டு நடத்த முடியும் என்றார். 

--

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51