எம்.எம்.சில்வெஸ்டர்
இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் போட்டி மத்தியஸ்தராக கடமையாற்றுவதன் மூலமாக டெஸ்ட் அரங்கில் 200 போட்டிகளில் போட்டி மத்தியஸ்தராக கடமையாற்றிய முதல் போட்டி மத்தியஸ்தர் என்ற சாதனையை படைத்தார் இலங்கையின் ரஞ்சன் மடுகல்ல.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னான் வீரரும் தற்போது ஐ.சி.சி. யின் பிரதான போட்டி மத்தியஸ்தராக கடமையாற்றும் ரஞ்சன் மடுகல்ல, 1993 ஆம் ஆண்டு போட்டி மத்தியஸ்தரர் பொறுப்பை ஏற்றார்.
அது முதல் இதுவரை காலமும் சிறந்த போட்டி மத்தியஸ்தராக அவர் கடமையாற்றி வருகிறார். இவரே ஐ.சி.சியின் முதலாவதும் ஒரேயொரு பிரதான போட்டி மத்தியஸ்தராகவுள்ளமை இலங்கைக்கு கிடைத்த பெருமையாகும்.
1982 முதல் 1988 வரையான 6 ஆறு ஆண்டு காலப்பகுதிகள் இலங்கைக்காக கிரிக்கெட் விளையாடியுள்ளதுடன், 2 போட்டிகளுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.
தனது 29 ஆவது வயதில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்றிருப்பினும், தனது 62 வயதிலும் தொடர்ந்தும் கிரிக்கெட்டுக்காக பணியாற்றி வருகின்றமை விசேட அம்சமாகும்.
இலங்கை - மேற்கிந்தியத் தீவுகளுடனான போட்டியானது போட்டி மத்தியஸ்தராக களம் காணும் இவரின் 200 ஆவது டெஸ்ட் போட்டி என்பதுடன், இதுவரை 369 சர்வதேச ஒரு நாள் போட்டிகளுக்கும், 125 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கு போட்டி மத்தியஸ்தராக செயற்பட்டுள்ளார்.
மேலும், மகளிர் சர்வதேச ஒருநாள் அரங்கில் 14 போட்டிகளுக்கும், மகளிர் சர்வதேச இருபதுக்கு 20 அரங்கில் 8 போட்டிகளுக்கும் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டுவரும் நூற்றுக்கும் மேற்பட்ட இருபதுக்கு 20 லீக் போட்டிகளுக்கும் போட்டி மத்தியஸ்தராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM