(இராஜதுரை ஹஷான்)
சுற்றுலா பயணிகளுக்காக நாடு கடந்த ஜனவரி மாதம் முழுமையாக திறக்கப்பட்டது. அன்றிலிருந்து இம்மாதம் வரை நாட்டுக்கு சுமார் 80 ஆயிரத்து 310 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதுடன் இம்மாதத்தின் முதலிரு வாரங்களில் மாத்திரம் 19,222 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கு தீர்வு காண வேண்டுமாயின் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் முன்னேற்றமடைய வேண்டும். சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு முறையான நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடன் வசதிகள், நிவாரன பொதி வழங்கள் உள்ளிட்ட திட்டங்கள் தற்போதும் செயற்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.
சுற்றுலா பயணிகளுக்காக நாடு கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய சுறறுலா பயணிகளை நாட்டுக்கு வரவழைக்கும் திட்டங்கள் முறையாக செயற்படுத்தப்பட்டன.
நிறைவடைந்த 10 மாத காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 80 ஆயிரத்து 310 சுற்றுலா வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இம்மாதத்தில் இரு வாரங்களில் மாத்திரம் 19 ஆயிரத்து 222 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இந்தியா,ஐக்கியஇராச்சியம்,ரஷ்யா,பாக்கிஸ்தான்,ஜேர்மனி,மாலைத்தீவு,பிரான்ஸ்,கடனா,அமெரி;க்கா மற்றும் சுவிஸ்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்கள்.
கடந்த செப்டம்பர் மாதம் 13 ஆயிரத்து 547 சுற்றுலா பயணிகளும், ஒக்டோபர் மாதம் 22 ஆயிரத்து 771 பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்கள்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் திட்டங்களை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது தினசரி 5 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவது பிரதான இலக்காகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM