(எம்.மனோசித்ரா)
நாட்டில் டெல்டா வைரஸ் திரிபின் புதிய அலகொன்று இனங்காணப்பட்டுள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் நோய் எதிர்ப்பு பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ,
'இலங்கையில் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட பீ.1.617.2.28 துணை அலகிற்கு மேலதிகமாக , 'பீ.1.617.2.104' என்ற புதிய துணை அலகொன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கையில் உள்ள டெல்டா மாறுபாடுகள் இப்போது இலங்கையில் தோன்றிய இரண்டு தனித்துவமான துணைப் பரம்பரைகளைக் கொண்டுள்ளன.
இவை ' ஏ.வை.28 - ஏ.வை.104 (AY.28 • AY.104)' என்று அடையாளப்படுத்தப்படுகின்றன.
இலங்கையில் இப்போது மூன்று கொவிட் திரிபு வகைகள் உள்ளன, அவை இலங்கையில் தோன்றியவையாகும்.
அவற்றில் முதலாவதாக இனங்காணப்பட்டது பீ.411 ஆகும்.' என்று விளக்கமளித்துள்ளார்.
' பீ.411 திரிபு 2020 டிசம்பரிலும் , பீ.1.1.7 கடந்த ஏப்ரலிலும் , பீ.1.617.2 கடந்த ஒக்டோபர் இறுதியிலும் இனங்காணப்பட்டுள்ளதாக' அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM