5 வயது உறவு முறை சகோதரியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் 

Published By: Digital Desk 4

18 Nov, 2021 | 08:38 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

தனது ஐந்து வயது உறவு முறை சகோதரியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 14 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தடுத்து வைக்க குளியாபிட்டிய நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இணைய வழி ஊடாக கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் தமது பிள்ளைகள் தொடர்பில் விழிப்பாக செயற்பட்டு, அவர்களது நடத்தைகள்  தொடர்பில் அவதானமாக இருக்காத பெற்றோர்கள் இவ்வாறான சம்பவங்களுக்கு பொறுப்புக்குற வேண்டும் என  இந்த உத்தர்வை பிறப்பித்து குளியாபிட்டிய நீதிவான் ஜனனி எஸ். விஜேதுங்க திறந்த மன்றில் சுட்டிக்காட்டினார்.

கடந்த 15 ஆம் திகதி  பொலிஸாரால், இந்த சிறுவனிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார். இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் தொடர்பில்  விசாரணைகளின் போது இந்த சிறுவன் தெரிவித்துள்ளதானது,

 'தனக்கு பாடசாலையின் சாதாரண தர மாணவர்கள் ஊடாக  யூ டியூப் மற்றும் வயது வந்தவர்களுக்கு மட்டும்  பார்க்க முடியுமான இணையத் தளங்களங்களை பார்க்க முதலில் சந்தர்ப்பம் கிடைத்ததது., அந்த பழக்கம் இணைய வழி கல்வி நடவடிக்கை இடையே  மேலும் வாய்ப்பாக அமைந்தது.' என தெரிவித்துள்ளார்.

 இந் நிலையில் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியின் சீர்த்திருத்த அதிகாரியிடம், தான் வீடியோ காட்சிகளில் பார்த்தவற்றை 5 வயது உறவுமுறை சகோதரியிடம் செயற்படுத்தி பார்த்ததாக தெரிவித்துள்ளார்.

பொலிஸ் விசாரணைகளின் பிரகாரம், கடந்த மாதம் குடும்ப தகராறு ஒன்றினை மையப்படுத்தி இந்த  14 வயது சிறுவனவும் அவனது இளைய சகோதரரும் தனது தாயின் அண்ணன் வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.

இக்காலப்பகுதியிலேயே இந்த துஷ்பிரயோக சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர்.

துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுமி குளியாபிட்டிய வைத்தியசாலையில் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31