(எம்.மனோசித்ரா)
நாட்டுக்கு தேவையான மருத்துவ தேவைகளில் 80 சதவீதமானவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதே எமது இலக்காகும். இம்முறை வரவு - செலவு திட்டத்தின் ஊடாக இந்த வேலைத்திட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இலங்கையில் முதலாவது மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் தொழிற்சாலையை பண்டாரகம பிரதேசத்தில் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் ,
மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட மருந்து தயாரிப்பு செயற்பாடுகளுக்காக உலகலாவிய ரீதியிலுள்ள முதலீட்டாளர்களுக்கு சிறந்த சந்தர்ப்பம் கிடைக்கும்.
இதன் ஊடாக மருத்துவ உபகரண தயாரிப்பில் இலங்கைக்கு முன்னணி நாடாகத் திகழ முடியும்.
மருத்துவ உபகரண தயாரிப்பிற்கு மாத்திரமின்றி விநியோகத்திற்கும் இது சிறந்த பாதையை உருவாக்கும். அத்தோடு இதற்கு முதலீட்டு சபையின் ஒத்துழைப்பும் தொடர்ச்சியாகக் கிடைக்கப் பெறும்.
நிதி அமைச்சு உள்ளிட்ட முழு அரசாங்கமும் இதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்பதோடு , இதற்காக பல்வேறு வேலைத்திட்ட ங்களும் திட்டமிடப்பட்டுள்ளன.
பரந்த விநியோக வலையமைப்பைக் கொண்ட இப்புதிய தொழிற்சாலை எதிர்காலத்தில் நாட்டின் ஏற்றுமதி செயன்முறைக்கு கணிசமான பங்களிப்பை வழங்கும்.
இவ்வாறான தொழிற்சாலைகள் நாட்டில் நிறுவப்படுவதையிட்டு இலங்கையர்களாகிய நாம் அனைவரும் பெருமையடைய வேண்டும். அது நாட்டின் எதிர்காலத்திற்கு மேலும் பலனளிக்கும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM