(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
நிதி அமைச்சரின் கன்னி வரவு செலவு திட்டம் புஸ்வாணமாகி இருக்கின்றது. மக்கள் எதிர்பார்த்த எந்த நிவாரணமும் இல்லை. அத்துடன் தேங்காய் எண்ணெய், சீனி இறக்குமதியில் ஏற்பட்ட பாரிய மோசடிகளுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2022 வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் வரவு செலவு திட்டம் மூலம் ஏதாவது நிவாரணம் கிடைக்கும் என்றே எதிர்பார்த்தார்கள். ஆனால் எந்த நிவாரணமும் இதில் மக்களுக்கு இல்லை. நிதி அமைச்சர் கன்னி வரவு செலவு திட்டத்தை முன்வைத்திருந்தபோதும் அது வெறும் புஸ்வாணமாகவே இருக்கின்றது.
அதேபோன்று ஒருசில வேலைத்திட்டங்களுக்கு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி எந்தவகையிலும் போதுமானதாக இல்லை.
அத்துடன் நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுவதற்கு ஊழல் மோசடியும் காரணமாகும். மத்திய வங்கி பிணையமுறி மோசடியுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்னும் நடவடிக்கை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பேபெச்சுவல் டிரஸ் நிறுவனத்தின் ஊழல் மோசடி அனைவரும் தெரிந்த விடயம். அடிக்கடி அதுதொடர்பில் அனைவரும் கதைக்கின்றனர்.
அர்ஜுன் மஹேந்திரனிடம் பணம் பெற்ற அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர்கள் எமது பக்கத்தில் இருந்தாலும் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றே தெரிவிக்கின்றேன்.
அத்துடன் மத்திய வங்கி பிணைமுறை மோசடியால் ஏற்பட்ட நஷ்டத்தை எமது அரசாங்கம் மீள பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்திருந்தது.
அதேபோன்று சீனி, தேங்காய் எண்ணெய் இறக்குமதியில் இடம்பெற்ற மோசடியில் நாட்டுக்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் நண்பர்களே இந்த மோசடியில் தொடர்பு பட்டிருக்கின்றனர்.
அதனால் இந்த மோசடியும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் இழந்த நட்டத்தையும் மீள பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM