உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு நாளை இந்தியாவின் மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இதன்போது இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்புக்கள் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் உடனான சந்திப்பில் கலந்துரையாடுவார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம கடந்த காலங்களில் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த பொது மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை இலங்கைக்கு விஜயமொன்றினை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பினை ஏற்று கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதி வாரத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் குறித்த விஜயம் இறுதி நேரத்தில் காலவரையறையின்றி பிற்போ டப்பட்டிருந்தது. இந்திய பிரத மர் நரேந்திர மோடிக்கும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கேரிக்கும் இடையில் கடந்த மாதம் 25ஆம் திகதி புது டெல்லியில் நடந்த இந்திய அமெரிக்க பொருளாதார கலந்துரையாடலின் நிமித்தம் அவர் புது டெல்லியில் நடந்த குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டமை யின் காரணமாகவே குறித்த விஜயம் பிற்போடப்பட்டிருந்தது.
எனினும் குறித்த கலந்துரையாடல் நிறைவடைந்திருக்கின்ற நிலையில் இந்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேட்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட உள்ளார்.
இந்த சந்திப்பின் போது இலங்கை - இந்திய கூட்டு ஆணைக்குழுவில்
இணக்கம் காணப்பட்ட இரு நாடுகளுக்கு இடையிலான பொருளா தார மற்றும் தொழிநுட்ப கூட்டு ஒப்பந்தம் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் இரு நாட்டு மீனவர் பிரச்சினை தொடர் பாகவும் பேச்சுவார் த்தை நடத்தப்பட உள்தா கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM