(எம்.மனோசித்ரா)
மேலதிக கொடுப்பனவு , அடிப்படை சம்பள அதிகரிப்பு, 12 ஆண்டு சேவையுடைய சிரேஷ்ட உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு இன்று புதன்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
சுகாதார தொழிற்துறையினரின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி கொழும்பு - 10 இல் அமைந்துள்ள சுகாதார அமைச்சின் முன்பாக இன்று முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பத்தேகம - விமலவன்ச தேரர் வீதியில் கூடிய தொழிற்சங்கத்தினர் வீதியோகத்தில் நின்று தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வைத்தியர்கள் , தாதிகள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
'அடிப்படை சம்பளத்தை அதிகரி' , 'சிரேஷ்ட ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கு' , 'தொழிற்சங்கத்தினரின் உரிமைகளை உறுதி செய்' , 'மேலதிக கொடுப்பனவை வழங்கு' என்ற வனசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM