புத்தளம், கற்பிட்டியில் டொல்பின் வசந்த காலம் ஆரம்பமாகியுள்ளது.
கற்பிட்டியில் டொல்பின் வசந்தம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக டொல்பின் மீன்களை பார்க்கும் பருவம் ஒரு மாதம் தாமதமாக தொடங்கியுள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.
எனினும், டொல்பின்களைப் பார்க்கும் பருவம் இம்மாதம் முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் இறுதி வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சிறிய இயந்திர படகில் மாலுமி மற்றும் உதவியாளர் உட்பட ஆறு பேர் மட்டுமே டொல்பின்களை பார்வையிட பயணிக்க முடியும்.
இதேவேளை, டொல்பின்களை பார்வையிடுவதற்காக பயணிப்போர் அதன் இயற்கையான செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அவற்றைப் பார்க்கவேண்டும் என வனஜீவராசிகள் திணைக்களத்தின் கற்பிட்டி அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த டொல்பின்களை 50 மீட்டர் தூரத்தில் இருந்து பார்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்பயணத்தின்போது, பாதுகாப்பு கவச ஆடைகள் கட்டாயமாக அணிய வேண்டும் என்பதுடன், குறித்த பாதுகாப்பு ஆடைகள் கட்டாயம் ஒவ்வொரு பயணத்திற்கு முன்னும் பின்னும் கிருமி நீக்கம் செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM