மரபணு (DNA) பரிசோதனையில் தமிழகத்தின் கோவையில் கடந்த ஆண்டு உயிரிழந்த இலங்கை பாதாள உலக குழு தலைவரான அங்கொட லொக்காவின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் பொய்யான பெயரில் தங்கியிருந்த போது மாரடைப்பு காரணமாக மத்துமகே லசந்த சந்தன பெரேரா என்ற அங்கொட லொக்கா 2020 ஜூலை 3 ஆம் திகதி உயிரிழந்தார்.
அவர் சேரன்மாநகர் பகுதியில், பாலாஜி நகரில் பிரதீப் சிங் என்ற பெயரில், அவரது காதலி அம்மானி தான்ஜியுடன் 2018 முதல் இரகசியமாக வசித்து வந்தார்.
அவரின் உயிரிழப்பை தொடர்ந்து பிரேத பரிசோதனைக்குப் பிறகு, உடல் மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
அவரது அடையாளத்தை உறுதிபடுத்த சிபி-சிஐடி பொலிஸார், இலங்கை அரசாங்கத்தின் உதவியுடன், அவரது தாயாரிடமிருந்து டி.என்.ஏ. மாதிரிகளைப் பெற்றனர்.
பெறப்பட்ட அந்த டி.என்.ஏ. மாதிரிகள் சென்னையில் உள்ள தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இந் நிலையில் செவ்வாய்க்கிழமை வெளியான அந்த டி.என்.ஏ. சோதனை முடிவுகளில் உயிரிழந்தவர் அங்கொட லோக்கா என்பது உறுதிபடுத்தப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM