அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் 8 ஆம் திகதி நடைப்பெறவுள்ளது. குறித்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர்.
உத்தியோகபூர்வ வேட்பாளராக இருவரும் அறிவிக்கப்பட்டதும் தீவிரமான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.
இதுவரை இருவரும் நேருக்கு நேராக மோதும் நேரடி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.இந்நிலையில் நேரடி விவாதம் நாளை (26) தொடங்குகின்றது.இந்த நேரடி விவாதம் 4 கட்டங்களாக நடைபெறவிருக்கின்றது.
முதல்கட்டமாக நாளை (திங்கட்கிழமை) நியூயோர்க்கில் உள்ள ஹோப்ஸ்டரா பல்கலைக்கழகத்தில் இரவு 9 முதல் 10.30 மணி வரை இவ்விவாதம் இடம்பெறுகின்றது.
அதில் இருவரும் அமெரிக்காவின் நிலை, செயல்படுத்த உள்ள திட்டங்கள், அமெரிக்க பாதுகாப்பு ஆகிய 3 தலைப்புகளின் கீழ் நேரடியாக பேசி தங்களின் கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர்.
கடந்த 1960 ஆம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முதன் முறையாக ஒரு பெண் போட்டியிடுகிறார். எனவே நாளை நடைபெறும் இந்த நேரடி விவாதம் வரலாற்று சிறப்புமிக்கதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM