(நா.தனுஜா)
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசாங்கத்திற்கு எதிரான மாபெரும் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாட்டில் பலபாகங்களிலிருந்தும் கொழும்பைநோக்கி வருகைதந்த மக்களைப் பொலிஸார் தடுத்துநிறுத்தித் திருப்பியனுப்பியதுடன் பொதுமக்களை ஏற்றிவந்த பஸ்வண்டிகளையும் வழமைக்கு மாறாக சோதனையிட்டனர்.
அத்தியாவசியப்பொருட்களின் விலையேற்றம், வாழ்க்கைச்செலவு உயர்வு, உரத்தட்டுப்பாட்டின் விளைவாக விவசாயிகள் முகங்கொடுத்துள்ள நெருக்கடிகள் உள்ளடங்கலாக அண்மைக்காலத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகளால் நாட்டுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் அரசாங்கத்தின் முறைகேடான செயற்பாடுகளுக்கும் செயற்திறனற்ற நிர்வாகத்திற்கும் எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் பாரிய மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இருப்பினும் அரசாங்கத்திற்கு எதிரான இம்மாபெரும் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பலபாகங்களிலிருந்தும் பஸ்வண்டிகள் ஊடாகவும் பேரணியாக நடந்தும் கொழும்பிற்கு வருகைதருவதற்கு முற்பட்ட மக்களுக்கு பொலிஸார் பல்வேறு வழிகளிலும் தடைகளை ஏற்படுத்தினர்.
அதன் ஓரங்கமாக புத்தளம் - அநுராதபுரம் பகுதியிலிருந்து கொழும்பிற்கு வருகைதந்த மக்களைத் தடுத்துநிறுத்திய இராஜாங்கனை பொலிஸார், அவர்களை மீளத்திரும்பிச்செல்லுமாறு பணித்தனர்.
பாணந்துறை, பேலியகொட, பொலனறுவை உள்ளடங்கலாக நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் பொதுமக்களை ஏற்றிவந்த பஸ்வண்டிகள் பொலிஸாரால் இடைமறிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக மக்களை ஏற்றிவந்த சில பஸ்வண்டிகள் திருப்பியனுப்பப்பட்டன.
அதுமாத்திரமன்றி வழமைக்கு மாறாக அநேகமான இடங்களில் பொலிஸார் வீதிமறியல்களைப் பயன்படுத்தி வாகனங்களை மறித்து சோதனைகளில் ஈடுபட்டதுடன் கூட்டமாக வருகைதந்த மக்களையும் தடுத்துநிறுத்தி விசாரணைகளை மேற்கொண்டனர்.
போராட்டத்தை நிறுத்துவதற்கும் மக்கள் கொழும்பிற்கு வருகைதருவதைத் தடுப்பதற்கும் பொலிஸாரால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவற்றைக்கடந்து நாட்டில் பலபாகங்களிலிருந்தும் மக்கள் பெருந்திரளெனத் திரண்டு கொழும்பை வந்தடைந்தனர்.
அதுமாத்திரமன்றி மக்கள் கொழும்பிற்கு வருகைதருவதற்கு எதிராகப் பொலிஸாரால் தடையேற்படுத்தப்பட்டபோது நடுவீதியில் படுத்திருந்தவாறு கோஷங்களை எழுப்பியும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, பந்துல குணவர்தன போன்றோரின் முகமூடிகள் இடப்பட்ட பதாதைகளை அடித்தும் அவர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM