(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் இப்போது கேட்டுக் கொண்டிருப்பது நட்டஈடு அல்ல. தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையையே கேட்டு நிற்கின்றனர் என்பதை சபையில் தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வெறுமனே குறிப்பிட்ட சில ஆயிரம் ரூபாக்களை கொடுப்பதன் மூலம் அவர்களின் துன்பதுயரங்கள் தீர்ந்துவிடாது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
இன்று வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு கூடுதலான நிதியை ஒதுக்கிருக்கின்றீர்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கப்படத்தான் வேண்டும். ஆனால் அந்த மக்கள் உங்களிடம் இப்போது கேட்டுக் கொண்டிருப்பது நட்டஈடு அல்ல. அவர்கள் தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்றே கேட்கின்றனர்.
தங்களுக்கான நீதியை கோரிவருகின்றனர். வெறுமனே குறிப்பிட்ட சில ஆயிரம் ரூபாக்களை கொடுப்பதன் மூலம் அவர்களின் துன்பதுயரங்கள் தீர்ந்துவிடாது.
சுயாதீன விசாரணையொன்றை மேற்கொள்வதன் மூலமே யுத்த காலத்தில் காணமலாக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்கும். நாங்கள் கோரும் நீதிப் பொறிமுறை என்பது தமிழ் மக்களுக்கானது மட்டுமல்ல அது சிங்கள மக்களுக்கானதும் என்பதை உணருங்கள்.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டுமென்பது தமிழ் மக்களினது மட்டுமல்லாது நாட்டின் முற்போக்கு சிந்தனையாளர்களினதும் சர்வதேச சமூகத்தினதும் நீண்டநாள் கோரிக்கையாக இருந்துவருகிறது.
அனைத்து அரசாங்கங்களும் அரசுக்கு மாறான கருத்துக்களை கொண்டவர்களை பயங்கரவாதி என்னும் பெயரில் கைதுசெய்வதற்கும் சிறைகளில் தடுத்துவைப்பதற்கும் பயன்படுத்தும் ஒரு சட்டமாகவே இந்த பயங்கரவாத தடைச்சட்டம் காணப்படுகிறது.
எனவே இச் சட்டத்தை இல்லாதொழிப்பதுடன் இச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுவித்தல் வேண்டுமென வலியுறுத்துகிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM