(என்.வீ.ஏ.)
சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) ஆடவர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போடடி முதல் தடவையாக ஐக்கிய அமெரிக்காவில் 2024இல் அரங்கேற்றப்படவுள்ளது.
அத்துடன் 2026 ஆடவர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இந்தியாவுடன் கூட்டாக நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
2024 இலிருந்து 2031வரையான இரண்டு வகை உலகக் கிண்ண கிரிக்கெட் மற்றும் சம்பியன்ஸ் கிண்ண கிரக்கெட் ஆகியன நடைபெறவுள்ள வருடங்களையும் நாடுகளையும் ஐ.சி.சி. இன்று அறிவித்தது.
இதற்கு அமைய இக் காலப்பகுதியில் 14 நாடுகள் தனித்து அல்லது கூட்டாக இப் போட்டிகளை நடத்தவுள்ளன. அவற்றில் 2025 சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானும் 2029 சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியை இந்தியாவும் தனித்து நடத்தவுள்ளன.
2026 இல் நடைபெறவுள்ள இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இந்தியாவுடன் இலங்கை கூட்டாக நடத்தும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
இன்னும் 5 வருடங்களில் நடைபெறவுள்ள இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை மேற்கிந்தியத் தீவுகளுடன் இணைந்து ஐக்கிய அமெரிக்கா நடத்தவுள்ளது.
இதன் மூலம் ஐக்கிய அமெரிக்காவில் முதல் தடவையாக உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அரங்கேற்றப்படவுள்ளது.
2017 இலிருந்து 2023 வரையான சுழற்சியில் ஆடவருக்கான உலக கிரிக்கெட் போட்டிகள் பெரும்பாலும் கிரிக்கெட்டின் முப்பெரும் சக்திகளான இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளையே தழுவி இருந்தன.
ஆனால், 2024 இலிருந்து 2031வரையான 7 வருட சுழற்சி காலப்பகுதியில் மூவகை பிரதான உலக கிரிக்கெட் போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடைபெறும்வகைகளில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM