ஆட்சியை கவிழ்ப்பது குறித்து எதிர்க்கட்சி தலைவருக்கு ஆளும் கட்சி அமைச்சர் வழங்கிய ஆலோசனை

Published By: Digital Desk 4

16 Nov, 2021 | 09:27 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் பரவல் தாக்கம் நாட்டிலிருந்து முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது என கருத்திற் கொண்டு எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள். திட்டமிட்ட வகையில் சஜித் கொவிட் கொத்தணியை உருவாக்கும் வகையில் எதிர்தரப்பினர் செயற்படுகிறார்கள். போராட்டங்களினால் அரசாங்கத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது. 

மேல்மாகாண ஊரடங்கு தொடர்பில் இவ்வாரம் இறுதித் தீர்மானம் - அமைச்சர் எஸ்.எம்  சந்திரசேன | Virakesari.lk

அரசாங்கத்தை எவ்வாறு வீழ்த்துவது என்பதை எதிர்க்கட்சி தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என காணி விவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2020ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை கொவிட்-19 வைரஸ் தாக்கம் செலுத்துகிறது.சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு முரனாக செயற்பட்டதன் காரணமாக கொவிட் -19 வைரஸ் தொற்று பல்வேறு சந்தர்ப்பங்களில் தீவிரமடைந்தது.ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க போராட்டத்தினால் கொவிட் தாக்கம் தீவிரமடைந்தது.

புதுவருட கொவிட் கொத்தணியில் இருந்து நாடு நீண்ட முடக்கத்திற்கு பிறகு கடந்த மாதம் முதல் வழமைக்கு திரும்பியுள்ளது அவ்வாறான நிலையில் நாட்டை மீண்டும் முடக்குவதற்கான முயற்சியை எதிர்க்கட்சியினர் முன்னெடுக்கிறார்கள்.சஜித் கொத்தணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுப்படும் வகையில் போராட்டங்களில் ஈடுப்படுகிறார்கள்.

கொவிட் -19 வைரஸ் தாக்கம் நாட்டிலிருந்து முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது என நினைத்துக் கொண்டு எதிர்தரப்பினர் போராட்டங்களில் ஈடுப்படுகிறார்கள்.மக்கள் எதிர்க் கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் போராட்டத்தில் ஈடுப்படுகிறார்கள்.

போராட்டங்களினால் அரசாங்கத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது அரசாங்கத்தை எவ்வாறு வீழ்த்துவது என்பதை எதிர்;க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.எதிர்வரும் தேர்தல்கள் காலத்தில் எதிர்க்கட்சியினர் மீது மக்கள் கொண்டுள்ள நிலைப்பாட்டை அறிந்துக் கொள்ள முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04