(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
இந்தியாவுடன் இலங்கை அரசாங்கம் பலமான நட்புறவை கொண்டிருக்கவில்லையென எதிர்க்கட்சியினர் தெரிவிக்கும் கருத்தை தான் முழுமையாக நிராகரிப்பதாகத் தெரிவித்த சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன, அரசாங்கத்தின் சிறந்த வெளியுறவுக் கொள்கை மற்றும் சர்வதேச நாடுகளுடனான சிறந்த நட்புறவாலேயே நெருக்கடிகால நிலைமையிலும் இலங்கையால் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது எனவும் கூறினார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (15) இடம்பெற வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
இந்தியாவுடன் அரசாங்கம் சிறந்த நட்புறவை கொண்டிருக்கவில்லை என எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர், ஆனால் அது உண்மையல்ல, எதிர்கட்சிகளின் இந்த கூற்றை முழுமையாக நிராகரிகின்றேன்.
இந்தியாவுடனான சிறந்த நட்புறவே பெருந்தொகை தடுப்பூசிகள் மற்றும் உதவிகளையும் பெற்றுக் கொள்ள இலங்கைக்கு உறுதுணையாக அமைந்தது.
அதேபோன்று ஜப்பான், ரஷ்யா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இந்த இக்கட்டான காலங்களில் கொரோனா தடுப்பூசிகளையும் பாரிய ஒத்துழைப்புக்களையும் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது.
எதிர்க்கட்சியினர் சிறுசிறு பிரச்சினைகளை பெரிதாக தூக்கிப் பிடித்துக்கொண்டு செயல்பட்டால் அது மேலும் மேலும் அவர்களின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும்.
நாட்டில் நிலவிய கொரோனா வைரஸ் சூழ்நிலையிலும் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் வெளிநாட்டுக் கடனை எந்த குறைவுமின்றி தொடர்ச்சியாக செலுத்தியுள்ளது. கொரோனாவை காரணம் காட்டி அதனை வழங்குவதில் அரசாங்கம் தவறவில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM