(எம்.மனோசித்ரா)
நவீன தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி நாட்டின் சிறு இறப்பர் தோட்ட உரிமையாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் இலங்கை - பிரான்ஸ் இருதரப்பும் அவதானம் செலுத்தியுள்ளன.
பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவெர்ட் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
நவீன தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி நாட்டின் சிறு இறப்பர் தோட்ட உரிமையாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் இதன் போது ஆழமாக அவதானம் செலுத்தப்பட்டது.
இது போன்ற வேலைத்திட்டங்கள் தற்போது இந்தோனேஷியா போன்ற நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தூதுவர் இதன் போது எடுத்துரைத்தார்.
அதற்கமைய முதற்கட்டமாக மொனராகலை மாவட்டத்தில் சிறிய இறப்பர் தோட்ட உரிமையாளர்கள் 6000 பேரை தெரிவு செய்து , நவீன தொழிநுட்பத்தினைப் பயன்படுத்துவதற்கான பயிற்சியளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்காக மிச்லிங்க ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.
பிரான்ஸ் நிதி அமைச்சின் நிதி மற்றும் தொழிநுட்ப சலுகையின் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்தோடு இந்த வேலைத்திட்டம் தொடர்பில் விரைவில் பெருந்தோட்டத்துறை அமைச்சும் , பிரான்ஸின் க்சபா நிறுவனமும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடவுள்ளன.
பெருந்தோட்டத்துறை அமைச்சின் செயலாளர் , இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM