இறப்பர் தோட்ட உரிமையாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த இலங்கை - பிரான்ஸ் நாடுகளுக்கிடையில் அவதானம்

Published By: Digital Desk 4

15 Nov, 2021 | 05:30 PM
image

(எம்.மனோசித்ரா)

நவீன தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி நாட்டின் சிறு இறப்பர் தோட்ட உரிமையாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் இலங்கை - பிரான்ஸ் இருதரப்பும் அவதானம் செலுத்தியுள்ளன.

பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண மற்றும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவெர்ட் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

நவீன தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி நாட்டின் சிறு இறப்பர் தோட்ட உரிமையாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் இதன் போது ஆழமாக அவதானம் செலுத்தப்பட்டது.

இது போன்ற வேலைத்திட்டங்கள் தற்போது இந்தோனேஷியா போன்ற நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தூதுவர் இதன் போது எடுத்துரைத்தார்.

அதற்கமைய முதற்கட்டமாக மொனராகலை மாவட்டத்தில் சிறிய இறப்பர் தோட்ட உரிமையாளர்கள் 6000 பேரை தெரிவு செய்து , நவீன தொழிநுட்பத்தினைப் பயன்படுத்துவதற்கான பயிற்சியளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்காக மிச்லிங்க ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஒத்துழைப்பும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

பிரான்ஸ் நிதி அமைச்சின் நிதி மற்றும் தொழிநுட்ப சலுகையின் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்தோடு இந்த வேலைத்திட்டம் தொடர்பில் விரைவில் பெருந்தோட்டத்துறை அமைச்சும் , பிரான்ஸின் க்சபா நிறுவனமும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடவுள்ளன.

பெருந்தோட்டத்துறை அமைச்சின் செயலாளர் , இறப்பர் அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59