மேல் மாகாணத்தில் தீவிர கண்காணிப்பில் பொலிஸார்

Published By: Gayathri

15 Nov, 2021 | 04:08 PM
image

(எம்.மனோசித்ரா)

மேல் மாகாணத்திற்குள் பொது மக்கள் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுகின்றனரா என்பது தொடர்பிலும், சுகாதார விதிமுறைகளை முற்றாக மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்காகவும் பொலிஸாரினால் விசேட சுற்றி வளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணி முதல் பகல் 2 மணிவரையான 2 மணித்தியாலங்களுக்குள் முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட சுற்றிவளைப்பில் பேரூந்துகள், மக்கள் முகக்கவசம் அணிந்துள்ள முறைமை, காற்று குளிரூட்பட்ட பேரூந்துகள், சில்லறை விற்பனை நிலையங்கள், இறைச்சி விற்பனை கடைகள், ஏனைய சிறு விற்பனை நிலையங்கள் உள்ளிட்டவை சோதனைக்குட்படுத்தப்பட்டன.



இந்த சுற்றிவளைப்பிற்காக 451 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன்போது 860 பேரூந்துகளும், 207 காற்று குளிரூட்டப்பட்ட பேரூந்துகளும், சில்லறை விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட 1,245 பல்வேறு விற்பனை நிலையங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

அதற்கமைய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றாமல் பயணித்த 318 பேரூந்துகள், 65 காற்று குளிரூட்டப்பட்ட பேரூந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கும், 505 விற்பனை நிலை உரிமையாளர்களுக்கும் பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31