அங்கொட லொக்காவின் நெருங்கிய உதவியாளரும் அவருக்கு அடைக்கலம் அளித்த நபரும் பெங்களூருவில் கைது

Published By: Vishnu

17 Nov, 2021 | 11:30 AM
image

கடந்த ஆண்டு கோயம்புத்தூரில் மாரடைப்பால் உயிரிழந்த இலங்கை பாதாள உலக குழு தலைவரான அங்கொட லொக்காவின் நெருங்கிய உதவியாளரும், அவருக்கு அடைக்கலம் அளித்த நபரும் கர்நாடகாவின் பெங்களூருவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இருவரையும் கைதுசெய்த சி.பி.சி.ஐ.டி., பொலிஸார், அவர்களை கோவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 

இதன்போது நீதிபதி உத்தரவின் கீழ் இருகூரம் பெருந்துறை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.

இலங்கையில் பாதால உலக குழுவின் தலைவராக இருந்த அங்கொட லொக்கா, கோவை சேரன்மாநகர் பகுதியில, பிரதீப் சிங் என்ற பெயரில், அவரது காதலி அம்மானி தான்ஜியுடன் 2018 முதல் இரகசியமாக வசித்து வந்தார். 

திடீர் உடல்நிலை பாதிக்கப்பட்ட அங்கொடா லொக்கா, 2020 ஜூலை 3 ஆம் திகதி உயிரிழந்தார். 

கோவை அரசு வைத்தியசாலையில் போலி சான்றிதழ் கொடுத்து அவரது சடலத்தை பெற்று சென்று, மதுரையில் தகனம் செய்தனர்.

அதன் பின்னர் இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வந்த நிலையில், வழக்கு சி.பி.சி.ஐ.டி.யின் கையில் ஒப்படைக்கப்பட்டது. 

அவர்களது விசாரணையில் இலங்கையை சேர்ந்த அம்மானி தான்ஜி, சடலத்தை எரிக்க உடந்தையாக இருந்த மதுரையைச் சேர்ந்த சட்டத்தரணி சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரை சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில், சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அம்மானி தான்ஜி, முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அங்கொட லொக்காவுக்கு இந்தியாவில் தங்க அடைக்கலம் கொடுத்த அவரது கூட்டாளிகளை, கோவை சி.பி.சி.ஐ.டி, பொலிஸார் தேடி வந்த நிலையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01