கடந்த ஆண்டு கோயம்புத்தூரில் மாரடைப்பால் உயிரிழந்த இலங்கை பாதாள உலக குழு தலைவரான அங்கொட லொக்காவின் நெருங்கிய உதவியாளரும், அவருக்கு அடைக்கலம் அளித்த நபரும் கர்நாடகாவின் பெங்களூருவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இருவரையும் கைதுசெய்த சி.பி.சி.ஐ.டி., பொலிஸார், அவர்களை கோவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதன்போது நீதிபதி உத்தரவின் கீழ் இருகூரம் பெருந்துறை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.
இலங்கையில் பாதால உலக குழுவின் தலைவராக இருந்த அங்கொட லொக்கா, கோவை சேரன்மாநகர் பகுதியில, பிரதீப் சிங் என்ற பெயரில், அவரது காதலி அம்மானி தான்ஜியுடன் 2018 முதல் இரகசியமாக வசித்து வந்தார்.
திடீர் உடல்நிலை பாதிக்கப்பட்ட அங்கொடா லொக்கா, 2020 ஜூலை 3 ஆம் திகதி உயிரிழந்தார்.
கோவை அரசு வைத்தியசாலையில் போலி சான்றிதழ் கொடுத்து அவரது சடலத்தை பெற்று சென்று, மதுரையில் தகனம் செய்தனர்.
அதன் பின்னர் இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வந்த நிலையில், வழக்கு சி.பி.சி.ஐ.டி.யின் கையில் ஒப்படைக்கப்பட்டது.
அவர்களது விசாரணையில் இலங்கையை சேர்ந்த அம்மானி தான்ஜி, சடலத்தை எரிக்க உடந்தையாக இருந்த மதுரையைச் சேர்ந்த சட்டத்தரணி சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரை சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில், சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அம்மானி தான்ஜி, முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அங்கொட லொக்காவுக்கு இந்தியாவில் தங்க அடைக்கலம் கொடுத்த அவரது கூட்டாளிகளை, கோவை சி.பி.சி.ஐ.டி, பொலிஸார் தேடி வந்த நிலையிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM