மன்னார், கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் நேற்று (13) காலை சடலமாக மீட்கப்பட்ட யுவதி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த யுவதி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் கீர்த்தனா (வயது-22) என தெரியவந்துள்ளது.
யுவதியின் தந்தை சிறு வயதிலே மரணித்த நிலையில் தாயின் பராமரிப்பில் உயிரிழந்த யுவதியும் அவரது இரு சகோதரர்கள் இருந்துள்ளனர்.
யுவதி உறவினர் ஒருவருடன் மன்னார் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (11) பணி முடிவடைந்த பின்னர் மன்னார் பஸ் தரிப்பிடத்திற்கு சென்றுள்ளார்.
இதன்போது அவரது நண்பர் எனக் கூறப்படும் ஆண்ணொருவருடன் சந்திப்பை மேற்கொண்ட காணொளி வெளிகாகியுள்ளது.
பின்னர் வியாழக்கிழமை மாலை மன்னார் பிரதான பாலத்தில் இருந்து யுவதி குதித்த நிலையில் நேற்று சனிக்கிழமை அவர் உயிரிழந்த நிலையில் சடலம் கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
யுவதியின் சடலத்தை தாய் மற்றும் சகோதரர் ஒருவர் இன்று காலை வைத்தியசாலைக்குச் சென்று அடையாளம் காட்டியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM