(எம்.எப்.எம்.பஸீர்)
கொழும்பு 5 - கிருலப்பனை பகுதியில், ஆழமான கால் வாய் ஒன்றுக்குள் நீர் குழாய் திருத்த பணிகளில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மீது, கால் வாயின் மண் திட்டு சரிந்து விழுந்ததில் அவ் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று அதிகாலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் கூறினர். சம்பவத்தில் 19 வயதான நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
கிருலப்பனை பொலிஸ் பிரிவில், பேஸ்லைன் வீதி - எட்மன்டன் வீதி சந்திக்கருகே, சுமார் 4.5 மீற்றர்கள் வரை ஆழமான கால் வாயொன்றில் நீர் குழாய்களை பொருத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
இருவர் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த இருவரும் குறித்த குழாய் இணைப்பு பணியை முடித்த பின்னர், கானில் தோண்டப்பட்ட பகுதியை மண்ணால் மூடும் போது, கால் வாயின் ஒரு பக்க மண் திட்டு சரிந்து 19 வயது இளைஞர் மீது விழுந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
இதனால் மண்ணுக்குள் புதையுண்டு அந்த இளைஞர் உயிரிழந்துள்ளதாகவும், சடலம் களுபோவில வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை கிருலப்பனை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM