தொடரும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் நவம்பர் மாதத்தின் முதல் 10 நாட்களில் மாத்திரம் 1,361 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முழுவதும் 770 டெங்கு நோயாளர்கள் மாத்திரம் பதிவாகியிருந்தனர்.
இந் நிலையில் இந்த ஆண்டு நவம்பரில் வெறும் 10 நாட்களுக்குள் பதிவான டெங்கு நோயாளர்களது எண்ணிக்கை ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.
இது இந்த ஆண்டு தொற்றுநோயின் அதிக தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.
கொழும்பு, மட்டக்களப்பு, பதுளை, கேகாலை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களிலே கணிசமான டெங்கு நோயாளர்கள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனவே வெள்ளம் குறையத் தொடங்கும் போது ஏற்படும் ஆபத்தான நிலைமை குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு நோய் தொடர்பான பின்வரும் அறிகுறிகள் காணப்படின் நோயாளியை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கவும்
- திரவ வகைகளைப் பருக முடியாதிருத்தல் (அடிக்கடி வாந்தயெடுத்தல்)
- உணவு, பாண வகைகளை நிராகரித்தல்
- கடுமையான தாகம்
- நோயாளி சிறுநீர் கழிக்குமட தடவைகள் குறைவடைதல் ( 6 மணித்தியாலத்திற்கு கூடுதலான நேரத்திற்குள் சிறுநீர் வெளிவராமை)
- கடுமையான வயிற்று வலி
- தூக்க நிலைமை
- நடத்தையில் மாற்றம் ஏற்படல்
- சிவப்பு/ கறுப்பு/ கபில நிற வாந்தியெடுத்தல்
- கறுப்பு நிற மலம் வெளியாதல்
- குருதிப்பெருக்கு (முரசுகளிலிருந்து குருதிப்பெருக்கு, சிறுநீர் சிவப்பு நிறத்தில் வெளியாதல்)
- தலைசுற்றுதல்
- கைகால்கள் குளிரடைதல்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM