(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
தோட்டத்தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வாக்குறுதி அளித்த ஆயிரம் ரூபா சம்பளம் நீதிமன்ற நடவடிக்கையால் தடைப்பட்டிருக்கின்றது.
அதனால் அடிப்படைச்சம்பள சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு ஆயிரம் ரூபா வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் அதுதொடர்பான வாக்குறுதியை வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் வழங்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம்பெற்ற வேலையாளர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயது சட்டமூலம் மற்றும் வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தும் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கும்போது, அதனை அடிப்படைச்சம்பளமாக வழங்குவதற்கு பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டுவருமாறு நாங்கள் அன்று தெரிவித்தோம். அவ்வாறு இடம்பெற்றிருந்தால் எந்த கம்பனிக்கும் அதனை நிராகரிக்க முடியாது.
ஆயிரம் ரூபா வழங்கியே ஆகவேண்டும். ஆனால் அரசாங்கம் திட்டமிட்டு செயற்பட்டு சம்பள நிர்வாகத்தில் திருத்தம் மேற்கொண்டது.
அவ்வாறு செய்து சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளும்போது கம்பனிகளுக்கு நீதிமன்றம் சென்று அதனை சவாலுக்கு உட்படுத்த முடியும் எனவும் நாங்கள் அன்று தெரிவித்திருந்தோம்.
ஆனால் இன்று என்ன நடந்திருக்கின்றது. அரசாங்கம் தெரிவித்த ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தோட்டத்தொழிலாளர்களுக்கு கிடைக்கின்றதா? குறைந்த பட்சம் அரசாங்கத்துக்கு கீழ் இருக்கும் தாேட்டங்களிலாவது இந்த ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படுவதில்லை.
நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணை இடம்பெறுவதால், வழக்கு முடியும்வரை ஆயிரம் ரூபா தோட்டத்தொழிலாளர்ளுக்கு கிடைக்கப்போவதில்லை.
அதனால் அடுத்த வருடத்தில் இருந்தாவது தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்குவதற்கு பாராளுமன்றத்தில் இருக்கும் அடிப்படை சம்பள சட்டத்தில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அவ்வாறு செய்தால் யாருக்கும் நீதிமன்றம் சென்று அதனை சவாலுக்கு உட்படுத்த முடியாது. இந்த வரவு செலவு திட்டத்திலாவது அதுதொடர்பில் பிரேரணையை அரசாங்கம் முன்வைக்கவேண்டும்.
அதேபோன்று காப்புறுதி துறையில் 45ஆயிரம் சேவகர்கள் இருக்கின்றனர். இதுவரை இந்த துறையினர் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றில் இணைத்துக்கொள்ளப்படவில்லை. இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து காப்புறுதி ஊழியர்களையும் ஈபிப். ஈடிப் கொடுப்பனவில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM