(எம்.மனோசித்ரா)
நாட்டில் இதுவரையில் சுமார் 22 000 விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதே வேளை 16 - 19 வயதுக்கிடைக்கப்பட்டவர்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு - சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் ஷமன் ரஜீந்திரஜித் தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
விசேட தேவையுடைய சிறுவர்களில் 22 000 பேருக்கு முதற்கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி வழங்கப்பட்டவர்களில் எவருக்கும் எவ்வித பக்க விளைவுகளும் பதிவாகவில்லை.
இதே போன்று 16 - 19 வயதுக்கு இடைப்பட்டவர்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இந்த வயதுப் பிரிவினரில் எமது இலக்கு 1.3 மில்லியன் பேருக்கு தடுப்பூசி வழங்குவதாகவும் அந்த இலக்கை விரைவில் அடைய முடியும்.
மேலும் 12 - 15 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்ளுக்கு தடுப்பூசி வழங்கல் தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு அதனை அறிக்கை தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்திலுள்ளன.
குறித்த அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் இந்த வயது பிரிவினருக்கு தடுப்பூசி வழங்கல் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM