(எம்.மனோசித்ரா)
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையுடன் டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக்கூடிய அபாயம் காணப்படுகிறது.
இவ்வாண்டில் மாத்திரம் இதுவரையில் 23,000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் லஹிரு கொடிதுவக்கு தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் ,
நாட்டில் டெங்கு நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம் இனங்காணப்பட்டுள்ளது. குறிப்பாக மேல் மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதேபோன்று பதுளை, மட்டக்களப்பு மற்றும் குருணாகல் மாவட்டத்தில் அதிக டெங்கு நோயளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
தற்போது காணப்படுகின்ற கொவிட் அச்சுறுத்தலால் டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலைகளுக்கு வந்து சிகிச்சை பெறுவதில் தயக்கம் காண்பிக்கின்றனர். இது தவறாகும்.
உரிய சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ளாமல் வெறுமனே மாத்திரைகளை மாத்திரம் எடுப்பது மரணம் வரை செல்லக்கூடிய அபாயத்தை தோற்றுவிக்கும்.
எனவே மருத்துவ ஆலோசனை இன்றி எவ்வித மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM