(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
கொரோனா மரணங்கள் அதிகரிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சியின் எதிர்பார்ப்பு,விருப்பமாக உள்ளது, எனவே நாட்டில் ஐந்தாவது கொரோனா அலை ஏற்பட்டு அதனால் மரணிக்கும் அத்தனை மக்களுக்கும் பிரதான எதிர்க்கட்சியே பொறுப்புக்கூற வேண்டும் என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10 ) இடம்பெற்ற ஒதுக்கீட்டு சட்டமூல திருத்தச இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்,
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா வைரஸ் திரிபடைந்து வருகின்றது. இது மீண்டும் இலங்கையை தாக்குமானால் தடுப்பூசியால் கூட கட்டுப்படுத்த முடியாது.
எனவே மக்கள் சுகாதார விதிமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டுமென மருத்துவ நிபுணர்கள் தினமும் எச்சரிக்கின்றனர்.
ஆனால் கொரோனாவின் ஐந்தாவது அலை எப்போது உருவாகுமென எதிர்க்கட்சி எதிர்பார்த்துக் காத்திருப்பதுடன் அதற்கு அழைப்பும் விடுக்கின்றது. இது கீழ்த்தரமான அரசியல் செயற்பாடாகும்.
ஒரு பக்கம் விவசாயிகள் ஆர்ப்பாட்டம். இன்னொரு புறம் ஆசிரியர்கள் போராட்டம். இவற்றுக்கு எதிர்க்கட்சியே அனுசரணை.
2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட முன்னர் முடிந்தளவுக்கு ஆர்ப்பாட்டங்களை செய்வதே இவர்களின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM