தமிழகத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு வடசென்னை மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினர் டொக்டர். கலாநிதி வீராசாமி கடிதம் எழுதி இருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 ஆம் ஆண்டு பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் துன்புறுத்தலுக்கு உள்ளாகிய, டிசம்பர் 2014 க்கு முன்னர் இந்தியாவிற்குள் குடியேறிய மத சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கு வகை செய்கிறது.
இதில் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் உட்படுத்தப்படவில்லை. பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வெளியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சட்டம், இலங்கை தமிழ் அகதிகளை புறக்கணித்தது ஏன்? இவர்களில் பெரும்பாலானோர் இந்துக்கள் தான்.
சிங்கள பேரினவாதம் கட்டவிழ்த்து விட்ட திட்டமிட்ட வன்முறையால் 1980 களிலும், 1990 களிலும் வெளியேறிய இலங்கை தமிழ் அகதிகள், தமிழ்நாட்டில் தஞ்சம்பெற அனுமதிக்கப்பட்டார்கள். அவர்கள் அகதிகளாக வந்தவர்கள். சட்டவிரோதமாக வந்தவர்கள் அல்ல.
அப்போதைய மத்திய அரசு அவர்களை வரவேற்றது. பதிவு செய்துகொண்டது. அகதிகள் முகாம்களில் அவர்களுக்கு அடைக்கலம் வழங்கியது. அவர்கள் இங்கே ஒரு வாழ்க்கையை தொடங்கி விட்டார்கள்.
இலங்கைக்கு திரும்பிச் செல்ல தாங்கள் வற்புறுத்தப்படுவோமா... என்று அவர்கள் அஞ்சுகின்றனர். உள்ளூர் மக்களோடு இணைந்து வாழ தங்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. முகாம்களிலும், முகாம்களுக்கு வெளியேயும் வாழ்ந்துவரும் ஒரு இலட்சம் அகதிகளின் துயரத்தை போக்குவதில் அரசு அக்கறை செலுத்தவேண்டும்.
ஆகவே, பல ஆண்டுகளாக இங்கே வாழ்ந்து வரும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்'' என்று அந்த கடிதத்தில் டொக்டர் கலாநிதி வீராசாமி குறிப்பிட்டிருக்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM