(ஏ.என்.ஐ)
ஜம்மு காஷ்மீர் பொலிஸார் புல்வாமா பகுதியில் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வை நடத்தினர். அப்பகுதி பாடசாலையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் துணைக் கண்காணிப்பாளர் முகமது ஷபி, சைபர் குற்றங்கள் குறித்தும் இணைய மோசடிகள் குறித்தும் மக்களுக்க விளக்கமளித்து உரையாற்றினார்.
அடையாள திருட்டு, கிரெடிட் கார்டு மோசடி, தரவு திருடுதல், சைபர் ஸ்டால்கிங், சிறுவர் துஷ்பிரயோகம், ஆபாசத்தைப் பரப்புதல் போன்றவை குறித்து விளக்கமளித்தார்.
சைபர் குற்றங்களுக்கு எதிரான முழு பாதுகாப்பு அமைப்பும் அடங்கிய சிறு புத்தகங்களும் பங்கேற்பாளர்களிடையே விநியோகிக்கப்பட்டன.
அதேபோன்று புல்வாமா பொலிஸாரின் முக்கிய தொலைப்பேசி இலக்கங்களும் வழங்கப்பட்டன. எந்தநேரத்திலும் சைபர் குற்றங்கள் குறித்து அறிவிக்கவும் அதற்கெதிரான நடவடிக்கைள் குறித்தும் ஆலோசனைகள் இதன்போது வழங்கப்பட்டன.
மேலும் சைபர் மோசடிகள் மற்றும் அதிலிருந்து தங்களை எவ்வாறு காப்பாற்றுவது என்பது பற்றிய தகவல்களை வழங்க ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் திட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM