“அரசாங்கத்தினால் எமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் எங்களின் வாழ்வில்நிச்சயம் திருப்பமொன்று ஏற்படும்” என்ற பெரும்நம்பிக்கையுடன் வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகம் முன்பாக தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கின்றார்கள்வட மாகாண சுகாதாரத் தொண்டர்கள்.
வடமாகாணத்தில் தீர்க்கப்படாதுள்ள பல்வேறு பிரச்சினைகளுள் ஒன்றாக இருக்கும்சுகாதார தொண்டர்கள் பிரச்சினையானது சிக்கலுக்கு உரியது. கடந்த காலத்தில் பதவியில் இருந்தமூன்று ஆளுநர்களும் மாறிமாறி ஆட்சிப் பீடமேறிய மத்திய அரசாங்கத்திற்கு ‘முண்டு’ கொடுத்துக்கொண்டிருந்தஅரசியல் கட்சிகளும், தனிநபர் அரசியல்வாதிகளும் ‘சுயலாப’ நோக்கில் முன்னெடுத்த முயற்சிகள்கூட வெற்றியளித்திருக்கவில்லை.
மாறாக, மீண்டும், மீண்டும் நிரந்தர நியமனத்திற்கான நேர்முகத்தேர்வுகள்இடம்பெற்று நிதி விரயம் செய்யப்பட்டதும், காலம் கடத்தப்பட்டதும், போராட்டம் செய்யும்தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதும் தான் விளைவாக இருக்கின்றது. உண்மையில்இந்த விடயத்தில் நடந்தது என்ன என்பது பற்றிய புரிதல் தற்போது அவசியமாகின்றது.
ஏனென்றால், வடமாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜாவும், அமைச்சர்டக்ளஸ் தேவானந்தாவும் தற்போது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சுகாதாரத் தொண்டர்களின்பிரச்சினையை கையில் எடுத்திருக்கின்றார்கள். இவர்கள் சிக்கலுக்கு உள்ளாக்கியிருக்கும்இப்பிரச்சினையை தீர்ப்பதில் தமது அதீத ஈடுபாட்டைக் காண்பிப்பதாக தகவல்கள் உள்ளன. இதில்அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்கனவே இந்த விடயத்தினை கையிலெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-11-07#page-18
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM