(எம்.மனோசித்ரா)
2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தினை தயாரிப்பதற்காக முதன்முறையாக மிக அதிகளவானோரது பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கமைய நிறுவனங்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடம் இவ்வாறு பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்றுக்கு மத்தியில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பொருளாதாரம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், இந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டு பொருளாதாரத்தை மீண்டும் பலப்படுத்தும் வகையில் அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், வெவ்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாவட்ட அரசியல் அதிகாரிகள், வெவ்வேறு தொழிற்சங்கள், வர்த்தக அமைப்புக்கள், இறக்குமதியாளர்கள், இளம் அமைப்புக்கள், தேயிலை, தேங்காய், ஆடை, மரக்கறி, பழங்கள், உணவு, மீன் உள்ளிட்ட தொழிற்துறைச் சார்ந்தவர்கள், தகவல் தொழிநுட்பம், இரத்தினம் மற்றும் தங்க ஆபரணத் தொழிற்துறை நிபுணர்கள், உள்ளிட்ட 102 தரப்பினரிடம் இவ்வாறு பரிந்துரைகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM