(இராஜதுரை ஹஷான்)
இறக்குமதி செய்யப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை துறைமுகத்தில் இருந்து விடுவிப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை துரிதகரமாக முன்னெடுக்காவிட்டால் சந்தையில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதில் தற்போது காணப்படும் தட்டுப்பாடு தொடர்ந்து நீடிக்கும் என அத்தியாவசிய பொருட்கள் மற்றும் திரவ இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடாக பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிப்பதில் பெரும் சிக்கல் நிலை காணப்படுகிறது. டொலர் பிரச்சினை காரணமாக கடந்த ஆறு மாத காலமாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் திரவ இறக்குமதியாளர்கள் பெரும் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளார்கள். சீனிக்கான தட்டுப்பாடு ஏற்பட்ட போதும் அரசாங்கம் கொள்கலன்களை விடுவிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியது.
பெருமளவிலான அத்தியாவசிய பொருட்கள் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.இருப்பினும் அவற்றை துறைமுகத்தில் இருந்து விடுவிக்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
அப்பொருட்களை விடுவிப்பது குறித்து அரசாங்கம் விரைவான தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும்.இல்லாவிடின் தற்போது சந்தையில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதில் காணப்படும் நெருக்கடி மேலும் தீவிரமடையும்,
சமையல் எரிவாயு, சீனி, அரிசி, பருப்பு உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. டொலர் பிரச்சினை காரணமாக அவற்றை துறைமுகத்திலிருந்து விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் நேற்று முன்தினம் பேச்சுவார்ததையில் ஈடுட்டோம்.
இன்று கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் அவ்விடயம் குறித்து கலந்துரையாடுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நுகர்வோரும், வர்த்தகர்களும் பாதிப்படையாத வகையில் அத்தியாசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்குமாறு கோரியுள்ளோம்.முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு சிறந்த தீர்வு கிடைக்கப் பெறும்.என எதிர்பார்க்கிறோம்.என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM