(எம்.மனோசித்ரா)
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய 8 ஆம் திகதியும் 9 ஆம் திகதியும் மேல் , சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு ஆகிய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி இடியுடன் கூடிய மழை பெற்றும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
150 மி.மீ. மழைவீழ்ச்சி
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் , கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும்.
வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் , மாத்தளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சியும் பதிவாகக் கூடும். ஏனைய பிரதேசங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும்.
மண்சரிவு எச்சரிக்கை
பதுளை, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய பதுளை மாவட்டத்தில் எல்ல, பசறை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் , காலியில் நாகொட, பத்தேகம, நெலுவை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் , களுத்துறையில் அகலவத்தை, புளத்சிங்கள ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் , கண்டியில் யட்டிநுவர, பஸ்பாகே கோரள, கங்காவத்தை கோரள, உடுநுவர, தொலுவ, ஹரிஸ்பத்துவ, உடபலாத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று கேகாலையில் யட்டியாந்தோட்டை, அரநாயக்க, புளத்கொஹூபிட்டி, கேகாலை, ருவன்வெல்ல, ரம்புக்களை, மாவனெல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், குருணாகலில் மல்லவப்பிட்டி மற்றும் மாவத்தகம ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், மாத்தளையில் ரத்தோட்டை மற்றும் உகுவெல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் , இரத்தினபுரியில் கலவான மற்றும் குருவிட்ட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
இரு வாரத்தில் 4000 பேர் பாதிப்பு
நாட்டில் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி முதல் இம்மாதம் 5 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கடும் மழை, காற்று, வெள்ளம், மின்னல் தாக்கம் , மண்சரிவு என்பவற்றின் காரணமாக நாடளாவிய ரீதியில் 1,143 குடும்பங்களைச் சேர்ந்த 4,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு குறித்த காலப்பகுதியில் ஐவர் உயிரிழந்துள்ளதோடு இருவர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், 12 வீடுகள் முழுமையாகவும், 635 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM