(எம்.மனோசித்ரா)
நாட்டில் நாளாந்தம் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை அவதானிக்க முடியவில்லை. இவ்வாறு தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிக்கின்றமையை விளையாட்டாகக் கருத முடியாது.
மீண்டும் பாரியதொரு கொவிட் அலை ஏற்பட்டால் அதனை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த முடியும் என்று என்னால் கூற முடியாது என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
நாளாந்தம் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சிறிய அதிகரிப்பை அவதானிக்க முடிகிறது. அதனை விட முக்கியத்துவமுடையது தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி இடம்பெறாமையாகும். கடந்த ஓரிரு வாரங்களாக தொற்றாளர் எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டது.
ஆனால் தற்போது நாளுக்கு நாள் இவ்வாறு தொற்றாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சியை அவதானிக்கக் கூடியதாக இல்லை. மாறாக தொற்றாளர் எண்ணிக்கையில் கணிசமானளவு அதிகரிப்பையே அவதானிக்க முடிகிறது. எவ்வாறிருப்பினும் இது தொடர்பில் இறுதி தீர்மானத்தை தற்போது எடுக்க முடியாது.
எனவே தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிக்கின்றமையை விளையாட்டாகக் கருத முடியாது. மீண்டும் பாரியதொரு கொவிட் அலை ஏற்பட்டால் அதனை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த முடியும் என்று என்னால் கூற முடியாது. இதற்கான தீர்வாக பிரதேசங்களின் அடிப்படையிலோ அல்லது தேசிய ரீதியிலோ நாட்டை முடக்க வேண்டிய நிலைமையே ஏற்படும்.
இந்த நிலைமை நாட்டில் ஏற்பட்டிருந்தமையை கடந்த காலங்களில் நாம் அனுபவித்தோம். இதே நிலைமை மீண்டும் மீண்டும் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அவ்வாறில்லை பாரதூரமானதொரு நிலைமை மீண்டும் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. இதன் ஊடாக நாடு மீண்டும் பின்நோக்கி செல்லக் கூடிய அச்சுறுத்தல் இன்னும் நீங்கவில்லை என்பது தெளிவாகிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM