வரவு - செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் தினத்தன்று நாடு தழுவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் - ஆசிரியர், அதிபர் சேவை சங்கம்

Published By: Digital Desk 3

05 Nov, 2021 | 10:09 AM
image

(இராஜதுரை ஹஷான்)

ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கத்தினருக்கு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒன்றிணைந்த சங்கத்தினர் இன்று பகல் 12 மணியளவில் நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படவுள்ளார்கள். 

வரவு-செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் தினத்தன்று நாடு தழுவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படுவோம் என ஆசிரியர் - அதிபர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

மாவனெல்ல மெடிரிகம வித்தியாலத்திற்குள் பலவந்தமான முறையில் சென்று ஆசிரியர் மற்றும் போராட்டத்தில் ஈடுப்பட்ட மாவனெல்ல பேராதெனிய சபையின் உப சபாபதி கே.ஜி.ஜயதிஸ்ஸவை உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லாவிடின் அதற்கு எதிராகவும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்போம் எனவும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்கத்தினரது ஆரப்பாட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பெற்றோர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. அமைதியான போராட்டத்தை அரசியல் அதிகாரத்தை கொண்டு முடக்க முயற்சித்தால் பல விளைவுகளை அரசாங்கம் எதிர்க்கொள்ள நேரிடும். 

அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளின் காரணமாகவே ஆசிரியர்-அதிபர் தொழிற்சங்க போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

மாவனெல்ல மெடிரிகம வித்தியாலத்திற்குள் பலவந்தமான முறையில் சென்று ஆசிரியர் மற்றும் போராட்டத்தில் ஈடுப்பட்ட மாவனெல்ல பேராதெனிய சபையின் உப சபாபதி கே.ஜி.ஜயதிஸ்ஸவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என உரிய தரப்பினரிடம் வலியுறுத்தியுள்ளோம்.

பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்து ஆசிரியர்களை, பெற்றோரை அச்சுறுத்தும் அதிகாரம் அரசியல்வாதிகளுக்கு கிடையாது. அவரை கைது செய்து முறையான விசாரணைகளை முன்னெடுக்காவிடின் அதற்கு எதிராகவும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

ஆசிரியர்- அதிபர் தொழிற்சங்கத்தினரது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒன்றினைந்த சங்கத்தினர் இன்று நாவல – திறந்த பல்கலைக்கழகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படவுள்ளார்கள்.

எதிர்வரும் 09ஆம் திகதி தேசிய எதிர்ப்பு தினத்தன்று நாடு தழுவிய ரீதியில் அனைத்து கல்வி வலய மட்டத்தில் பிற்பகல் 2 மணியளவில் போராட்டத்தில் ஈடுப்படவுள்ளோம். அத்துடன் வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் தினத்தன்று பாரிய போராட்டத்தில் ஈடுப்படவுள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18