(எம்.எப்.எம்.பஸீர்)
சர்ச்சைக்குரிய பன்டோரா பேப்பர்ஸ் வெளிப்படுத்தல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் இடைக்கால அறிக்கையை ஜனாதிபதிக்கு கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உறவினரான முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபகஷவின் கணவர் திருக்குமார் நடேசன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் நிலைமையை விளக்கும் விதமாக இந்த இடைக்கால அறிக்கை கையளிக்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது.
திருக்குமார் நடேசனின் வங்கி நடவடிக்கைகள் மற்றும் அரச நிறுவனங்களில் பெற்றுக்கொண்ட ஆவணங்கள் தொடர்பிலான பகுப்பாய்வு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், இந்த இடைக்கால அறிக்கை கையளிக்கப்படவுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் செயலாளர் அப்சரா கல்தேரா தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உறவினரான முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவிடம் விசாரணைகள் முன்னெடுக்க முயற்சிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சுகயீனம் காரணமாக அவரிடம் வாக்கு மூலம் ஒன்றினை பெற்றுக்கொள்ள முடியாது போனதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் விசாரணைப் பிரிவை வழி நடாத்தும் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். எவ்வாறாயினும் மிக விரைவில் அந்த வாக்கு மூலம் பதிவு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் குறித்த பன்டோரா பேப்பர்ஸ் வெளிப்படுத்தல்கள் தொடர்பில் வாக்கு மூலம் வழங்க, சிறையிலிருந்து ரஞ்சன் ராமநாயக்க முன் வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. மிக விரைவில் ரஞ்சன் ராமநாயக்கவிடம் சாட்சியம் பெறப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு தெரிவித்தது.
பன்டோரா பேப்பர்ஸில் தமது பெயர் வௌியாகியமை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துமாறு முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுந்திருந்தார்.
அதன்படியே விசாரணைகளை முன்னெடுக்க கடந்த 6 ஆம் திகதி ஜனாதிபதி உத்தரவிட்ட நிலையில், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் விசாரணைப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நுவன் அசங்க விதானகேவின் நேரடி கட்டுப்பாட்டில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் பண கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பிலான தகவல்கள் பண்டோரா பேப்பர்ஸில் ஊடாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இது நாட்டில் பெரும் பேசுபொருளாக மாறியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM