பன்டோரா பேப்பர்ஸ் வெளிப்படுத்தல்கள் : ரஞ்சன் ராமநாயக்கவின் சாட்சியமும் பெறப்படவுள்ளது

Published By: Digital Desk 3

05 Nov, 2021 | 09:40 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

சர்ச்சைக்குரிய பன்டோரா பேப்பர்ஸ் வெளிப்படுத்தல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் இடைக்கால அறிக்கையை ஜனாதிபதிக்கு கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உறவினரான முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபகஷவின் கணவர் திருக்குமார் நடேசன் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட  விசாரணைகளின் நிலைமையை விளக்கும் விதமாக இந்த இடைக்கால அறிக்கை கையளிக்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

திருக்குமார் நடேசனின் வங்கி நடவடிக்கைகள் மற்றும் அரச நிறுவனங்களில் பெற்றுக்கொண்ட ஆவணங்கள் தொடர்பிலான பகுப்பாய்வு நடவடிக்கைகள் தொடரும் நிலையில், இந்த இடைக்கால அறிக்கை கையளிக்கப்படவுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் செயலாளர் அப்சரா கல்தேரா தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உறவினரான முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவிடம் விசாரணைகள் முன்னெடுக்க முயற்சிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சுகயீனம் காரணமாக அவரிடம் வாக்கு மூலம் ஒன்றினை பெற்றுக்கொள்ள முடியாது போனதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் விசாரணைப் பிரிவை வழி நடாத்தும் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். எவ்வாறாயினும் மிக விரைவில் அந்த வாக்கு மூலம் பதிவு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் குறித்த பன்டோரா  பேப்பர்ஸ் வெளிப்படுத்தல்கள் தொடர்பில் வாக்கு மூலம் வழங்க, சிறையிலிருந்து ரஞ்சன் ராமநாயக்க முன் வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. மிக விரைவில் ரஞ்சன் ராமநாயக்கவிடம் சாட்சியம் பெறப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு தெரிவித்தது.

பன்டோரா  பேப்பர்ஸில் தமது பெயர் வௌியாகியமை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்துமாறு முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமார் நடேசன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுந்திருந்தார்.

அதன்படியே விசாரணைகளை முன்னெடுக்க கடந்த 6 ஆம் திகதி ஜனாதிபதி  உத்தரவிட்ட நிலையில்,   இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் விசாரணைப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நுவன் அசங்க விதானகேவின் நேரடி கட்டுப்பாட்டில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அண்மையில் முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் பண கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பிலான தகவல்கள் பண்டோரா பேப்பர்ஸில் ஊடாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. இது நாட்டில் பெரும் பேசுபொருளாக மாறியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29