(எம்.எப்.எம்.பஸீர்)
முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்ட முடிவினை செல்லுபடியற்றது என அறிவிக்கக் கோரியும் அவரைக் கைது செய்து விசாரணை செய்ய பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடக் கோரியும் தாக்கல் செய்யப்பட்டுள்ள கட்டளை நீதிப்பேராணை மனு விசாரணைக்கு ஏற்கப்படாது தள்ளுபடி செய்யப்பட்டது.
இதற்கான உத்தரவை மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் பிறப்பித்தது.
இந்த மனுவானது பரிசீலிக்கப்பட்ட போது மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளை முன் வைத்த சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே, குறித்த மனுவை விசாரணைக்கு ஏற்காது தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டிருந்தார்.
அரசியலமைப்பின் 35 ஆவது உறுப்புரை பிரகாரம் ஜனாதிபதியின் அதிகாரத்தை சவாலுக்கு உட்படுத்த, மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு அதிகாரமில்லை என சுட்டிக்காட்டி அவர் குறித்த வாதத்தை முன் வைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்ற தீர்மானத்தை அறிவித்த நீதிமன்றம், சட்ட மா அதிபரின் வாதத்தை மன்று ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது.
அதன்படியே எந்த சட்ட அடிப்படையும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த மனுவை விசாரணைக்கு ஏற்காது தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது.
முன்னதாக முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ராலை மத்திய ஆளுநர் பதவிக்கு நியமிப்பதை தடுக்க கோரி கடந்த செப்டம்பர் 14 அம் திகதி தெற்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் மேன்முறையீட்டு நீதிமன்றில் கட்டளை நீதிபேராணை மனுவொன்றினை தாக்கல் செய்திருந்தார்.
பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருந்த பரிந்துரைகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள விதந்துரைகளை மையப்படுத்தி அஜித் நிவார்ட் கப்ராலை கைது செய்து தடுத்து வைத்து வாக்குமூலம் பதிவு செய்யுமாறும் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் சட்டமாதிபர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு கட்டளை பிறப்பிக்க வேண்டும் என அம்மனுவில் கோரப்பட்டிருந்தது.
சட்டமாதிபர், பொலிஸ்மா அதிபர், அஜித் நிவார்ட் கப்ரால், ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி. பி. ஜயசுந்தர, நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் டி.எம். ஜே.வை, பி பெர்னான்டோ ஆகியோர் இம்மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM