மூடப்பட்ட சரணாலயத்தில் அமைச்சருக்கு இரவில் என்ன வேலை?

Published By: Ponmalar

22 Sep, 2016 | 08:08 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

யால சரணாலயம் மூடப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் ஒருவர் தினமும் இரவில் அங்கு செல்வதன் மர்மம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. ஜானக, புதையல் வேட்டையின் ஆரம்பமா என்று மக்கள் சந்தேகம் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். 

பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர்  தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இலங்கை சுற்றுலாத்துறையில் முக்கிய வருமானத்தை ஈட்டுகின்றது. அதிலும் நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளில் 90 வீதமானோர் தென் மாகாணத்திற்கு செல்லாமள் போக மாட்டார்கள். யால சரணாலயமே இதற்கு காரணம். ஆனால் கடந்த பல மாங்களாக இந்த சரணாலயம் மூடப்பட்டுள்ளது. பகலில் மூடு விழா காணும்  யால சரணாலயத்திற்கு இரவு 9 மணி மற்றும் அதிகாலை 3 மணிக்கு அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் செல்வது எதற்காக என தெரிய வில்லை. 

கடந்த காலங்களில் முக்கிய சந்திஷ்டானங்கள் உடைக்கப்பட்டு புதையல் திருடப்பட்டுள்ளது. அவ்வாறான செயற்பாடுகள் யால சரணாலயத்தில் இரவில் இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் தற்போது மக்கள் மத்தியில் காணப்படுகின்றது என குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31