2021 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களை தேர்வுசெய்வதற்கான (Player Draft) நடவடிக்கை எதிர்வரும் 05 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இணைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தப்படும் இந்த வீரர்களின் தேர்வு இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளின் அனுசரணையில் நடைபெறும்.
போட்டியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து அணிகளின் உரிமையாளர்கள் அல்லது பயிற்சியாளர்களினால் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அதன்படி, 300 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 300 உள்ளூர் வீரர்கள் என மொத்தம் 600 வீரர்கள் இந்த ஆண்டுக்கான போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட தகுதி பெற்றுள்ளனர்.
இது கடந்த ஆண்டை விட 165 வீரர்கள் அதிகம்.
ஒரு அணியில் 14 உள்ளூர் மற்றும் 06 வெளிநாட்டு வீரர்கள் உள்ளடங்கலாக 20 வீரர்கள் வரை தேர்ந்தெடுக்கப்படுவர்.
தேவைப்பட்டால் ஒரு அணி முந்தைய ஆண்டு அணியில் இருந்து 08 வீரர்களை (04 உள்ளூர் மற்றும் 04 வெளிநாட்டு வீரர்களை) தக்க வைத்துக் கொள்ளலாம், மீதமுள்ளவர்கள் வரவிருக்கும் ‘பிளேயர் டிராஃப்டில்’ இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
டிசம்பர் மாதம் 05 ஆம் தேதி தொடங்குவதற்கு திட்டமிடப்பட்ட லங்கா பிரிமியார் லீக்கின் முதல் சுற்று போட்டிகள் கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்திலும் இறுதிச் சுற்றுப் போட்டிகள் ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மைதானத்திலும் நடைபெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM