இலங்கையில் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை பாரிய வெற்றி - கெஹெலிய ரம்புக்வெல்ல

Published By: Digital Desk 3

02 Nov, 2021 | 12:56 PM
image

(எம்.மனோசித்ரா)

உலகளாவிய ரீதியில் சில நாடுகளில் மாத்திரமே மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் இலங்கையில் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை பாரிய வெற்றியாகும். உலகில் ஓரிரு நாடுகளில் மாத்திரமே இதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கொழும்பு - சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை உள்ளிட்ட இடங்களில் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன.  இதன் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

நாட்டின் முழு சனத்தொகையில் 70 சதவீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் சகலருக்கும் தடுப்பூசி வழங்கும் பணிகள் நிறைவடையும் தருவாயிலுள்ளன. 

விசேட தேவையுடைய சிறுவர்கள் 12 , 15 , 18 மற்றும் 19 வயதுகளையுடைய மாணவர்களுக்கும்  தடுப்பூசியை வழங்கி உயர்தர மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

பாடசாலை மட்டத்தில் சகல மாணவர்களுக்கும் தடுப்பூசி வழங்கும் பணிகளை விரைவில் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இம்மாதம் முதலாம் திகதி முதல் முதற்கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் நிச்சயம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறு மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கலின் போது முன்னுரிமையளிக்கப்படும் குழுக்களாக சுகாதார ஊழியர்கள், முப்படையினர், சுற்றுலாத்துறையினர்  உள்ளிட்டோர் இனங்காணப்பட்டுள்ளனர். 

இந்த குழுக்களுக்கு அவர்கள் சார்ந்த துறையினர் ஊடாகவே தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏனையோருக்கு இந்த தரப்பினர் ஊடாக தடுப்பூசி வழங்கப்படும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58