கிளிநொச்சியில் தொடர் மழையால் மக்கள் வாழ்க்கை பாதிப்பு

Published By: Gayathri

01 Nov, 2021 | 08:24 PM
image

கடந்த சில நாட்களாக பெய்து வரும்  மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பல தாழ் நிலப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். 

இருப்பினும் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து செல்லும் நிலைமை ஏற்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக தற்காலிக வீடுகளில் வசிக்கின்ற மக்கள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். அவர்களது வீடுகளுக்குள்ளும் மழை நீர் உட் புகுந்துள்ளது. 

கடந்த காலத்தில் நிரந்தர வீட்டுத்திட்டங்களுக்கு உள்வாங்கப்பட்டு ஆரம்ப கட்டக் கொடுப்பனவுகளை மட்டும் வழங்கப்பட்ட நிலையில் மிகுதி கொடுப்பனவுகள் வழங்கப்படாமல் வீட்டுத்திட்டத்தை பூர்த்தி செய்ய முடியாத குறித்த மக்கள்  பெய்து வருகின்ற மழை காரணமாக நெருக்கடிகளை சந்தித்துள்ளனர்.

அத்தோடு  மாவட்டத்திலுள்ள குளங்களின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது. 10அடி 6 அங்குலத்தைக் கொண்ட கனகாம்பிகைக்குளம் 10 அடி 6.5 அங்குலத்திற்கு நீர் மட்டம் அதிகரித்தமையால் 0.5" அங்குலத்திற்கு தற்போது வான் பாய ஆரம்பித்துள்ளது.

மேலும் வெள்ளம் அனர்த்தம் ஏற்பட்டுள்ள பிரதேசங்களில் இராணுவம்,  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பிரதேச செயலகங்கள் ஆகியவை பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51