உடல்நல குறைவின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிகிச்சைக்கு பிறகு பூரண நலமுடன் நேற்றிரவு வீடு திரும்பினார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு திரைத்துறையில் சிறப்பான சேவையாற்றியதற்காக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.
அதனை நேரில் சென்று பெற்றுக்கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், புது டில்லியிலிருந்து குடியரசு தலைவர் மற்றும் பாரத பிரதமர் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்று சென்னை திரும்பினார்.
அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இரத்த நாள திசு அழிவு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு Carotid artery revascularization எனும் சத்திர சிகிச்சையை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அவரது இரசிகர்கள் ரஜினிகாந்த் பூரண நலம்பெற வேண்டி தீச்சட்டி ஏந்தியும், மண்சோறு சாப்பிட்டும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
மக்களின் பிரார்த்தனை மற்றும் மருத்துவர்களின் சிகிச்சை காரணமாக அவர் பூரண நலம் பெற்று தற்பொழுது வீடு திரும்பியுள்ளார்.
வீடு திரும்பிய அவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் 'எனக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி' என பதிவிட்டிருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி இருக்கும் அண்ணாத்த படம் நவம்பர் 4ஆம் திகதி தீபாவளித் திருநாள் அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM