ஐ.சி.சி. ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ணத்தில் ஹெட்ரிக் சாதனை படைத்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை இலங்கை அணியின் பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க பெற்றார்.
நடைபெற்று வரும் டி-20 உலகக் கிண்ணத்தில் சனிக்கிழமை தென்னாபிரிக்காவுக்கு எதிராக சார்ஜாவில் அரங்கேறிய ஆட்டத்தின்போதே ஹசரங்க இந்த சாதனையை படைத்தார்.
ஹசரங்கவின் மூன்றாவது ஓவரின் இறுதிப் பந்து வீச்சல் எய்டன் மார்க்ரமை முதலில் ஆட்டமிழக்கச் செய்தார். அதன் பின்னர் அவரது நான்காவது ஓவரின் முதல் பந்தில் தென்னாபிரிக்க அணித் தலைவர் பவுமாவை 46 ஓட்டங்களில் வெளியேற்றினார்.
அடுத்து களமிறங்கிய டுவைன் பிரிட்டோரியஸை அடுத்த பந்தில் ஆட்டமிழக்க செய்து, இந்த சாதனையை புரிந்தார் ஹசரங்க.
ஹசரங்கவின் இந்த மகத்தான பங்களிப்பு இலங்கையை வெற்றியின் விளிம்பிற்கு அழைத்து செல்வற்கு உதவியது.
இருப்பினும் டேவிட் மில்லர் மற்றும் ககிசோ ரபாடாவின் வலுவான இணைப்பாட்டம் இலங்கையின் வெற்றியை தட்டிப் பறித்தது.
ஹசரங்க நான்கு ஓவர்களுக்கு பந்துப்பரிமாற்றம் மேற்கொண்டு 20 ஓட்டங்களை வழங்கி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் துஷ்மந்த சமீர மற்றும் லஹிரு குமார ஆகியோர் 11 பந்துகளில் 28 ஓட்டங்களை விட்டுக்கொடுத்ததால், அடுத்த இரண்டு ஓவர்களில் ஆட்டம் தலைகீழாக மாறியது
இதனால் சூப்பர் 12 இல் இலங்கை இரண்டாவது தோல்வியைத் தழுவியது.
அவுஸ்திரேலியாவின் பிரட் லீ (2007) மற்றும் ஸ்கொட்லாந்தின் கர்டிஸ் கேம்பர் (2021) ஆகியோருக்குப் பிறகு டி-20 உலகக் கிண்ணத்தில் ஹெட்ரிக் எடுத்த மூன்றாவது வீரர் ஹசரங்க ஆவார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM