இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (அக்டோபர் 30) போப் பிரான்சிஸை சந்தித்து கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு அதன் விளைவுகள் குறித்து விவாதித்தார்.
இதன்போது பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்கள் குறித்தும் கவனம் செலுத்தினர்.
காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் இந்தியா எடுத்துள்ள இலட்சிய முயற்சிகள் மற்றும் ஒரு பில்லியன் கொவிட்-19 தடுப்பூசி டோஸ்களை வழங்குவதில் நாட்டின் வெற்றியைப் பற்றி போப்பிடம் மோடி விளக்கினார்.
தொற்றுநோய்களின் போது தேவைப்படும் நாடுகளுக்கு இந்தியாவின் உதவியை போப் பிரான்சிஸ் பாராட்டினார்.
இதன்போது விரைவில் இந்தியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடி பரிசுத்தருக்கு அழைப்பு விடுத்தார், அதை அவரும் போப்பும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.
ஆதாரங்களின்படி, பிரதமர் மோடி மற்றும் போப் பிரான்சிஸ் இடையேயான சந்திப்பு 20 நிமிடங்கள் மட்டுமே திட்டமிடப்பட்டது, எனினும் அது ஒரு மணி நேரம் நீடித்தது.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஒரு இந்தியப் பிரதமர் மற்றும் போப் இடையேயான முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 2000 இல், மறைந்த இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கடைசியாக வத்திகானுக்கு சென்று அப்போதைய போப் இரண்டாம் ஜான் பால் அவர்களைச் சந்தித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM