(இராஜதுரை ஹஷான்)
மின்சாரத்துறைக்கும், வலு சக்திக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்காவின் நியூபோர்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
வலு சக்தி துறையில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தினால் இலங்கையின் அழிவு ஆரம்பமாகும் என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
புறக்கோட்டையில் உள்ள சொலிஸ் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற 'மக்கள் பேரவை' மாநாட்டில் கலந்து க்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மின்சாரத்துறைக்கும்,வலு சக்திக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்காவின் நியூபோர்;ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. நெடுகால திட்டத்தின் உள்ளடக்கம் தற்போது வெளியாகியுள்ளன.
நல்லாட்சி அரசாங்கம் அமெரிக்காவுடன் இரண்டு பிரதான ஒப்பந்தங்களை கைச்சாத்திட முயற்சித்தது.அமெரிக்காவுடனான எக்சா மற்றும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தால்.இன்று அமெரிக்க இராணுவம் இலங்கையில் முகாமிட்டிருக்கும்.
நல்லாட்சி அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடித்தோம்.ஆனால் தற்போது நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கம் தற்போது உருமாறி யுகதனவி விவகாரத்தின் ஊடாக வந்துள்ளது.இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது.நாட்டையும்,நாட்டின் இறையான்மையையும் பாதுகாக்க ஒன்றினைந்துள்ளோம்.
யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை விற்பது அமெரிக்காவிற்கு விற்பது இலங்கையின் அழிவிற்கு ஆரம்பமாக அமையும்.நாட்டின் நலனை கருத்திற் கொண்டு அரசாங்கத்தில் இருந்துக் கொண்டு அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்.
தவறான தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும்.என்பதை தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.நாடு பாதுகாப்பாக இருந்தால் தான் ஏனைய விடயங்களை செயற்படுத்த முடியும்.என்பதை அரச தலைவர்களுக்கு வலியுறுத்தியுள்ளோம்.என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM