(எம்.எம்.சில்வெஸ்டர்)
இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை, இலங்கை பொலிஸ் ஆகியவற்றின், ஒன்றிணைந்த ரக்பி குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'வோரியர்' கிண்ண ரக்பி செவன்ஸ் தொடர் நாளை 30 ஆம் திகதி மற்றும் நாளை மறுதினம் 31 ஆம் திகதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளன.
கொழும்பு 'பொலிஸ் பார்க்' மைதானத்தில் நாளை காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் இப்போட்டித் தொடரில் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை , இலங்கை பொலிஸ் ஆகியவற்றிலிருந்து தலா 2 அணிகளும் சீ.எச். அண்ட் எப்.சீ. அணியும் ஹெவ்லொக்ஸ் அணியும் விளையடாவுள்ளன.
இப்போட்டித் தொடரின் முதலாவது போட்டி 30 ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், இறுதிப் போட்டி 31 ஆம் திகதி மாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்படவுள்ள ஆசிய ரக்பி செவன்ஸ் போட்டித் தொடரில் இலங்கை ரக்பி அணி பங்கேற்கவுள்ளது.
ஆகையால், 'இலங்கை ரக்பி குழாத்துக்கு வீரர்களை தெரிவு செய்யப்படுவதற்காகவே, வோரியர்' ரக்பி கிண்ணத் தொடரை இலங்கை ரக்பி சம்மேளனம் நடத்துகிறது.
சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக நடத்தப்படும் இப்போட்டித் தொடரை கண்டுகளிப்பதற்கு இரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும், இப்போட்டியை தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்களில் நேரடியாக கண்டுகொள்ள முடியும் என போட்டி ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM