(எம்.எப்.எம்.பஸீர்)
வெளிநாடுகளில் இருந்து சேதனப் பசளை இறக்குமதி செய்வதை தடுத்து உத்தரவொன்றினைப் பிறப்பிக்குமாறு கோரி மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவை எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி பரிசீலிக்க நீதிமன்றம் தீர்மனித்துள்ளது.
சுற்றுச் சூழல் நீதிக்கான மையம் தாக்கல் செய்துள்ள இந்த மனுவை மேன் முறையீட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (29 ) ஆராய்ந்த போதே இந்த தீர்மானம் எடுக்கபப்ட்டது.
மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக கனேபொல ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் இதற்கான அறிவித்தலை பிறப்பித்தனர்.
இன்று இந்த மனு ஆராயப்பட்ட போது, சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான அரச சட்டவாதி, வெளிநாட்டிலிருந்து சேதனப் பசளை இரக்குமதி செய்யப்படப் போவதில்லை என தெரிவித்தார்.
அத்துடன் ஏற்கனவே தருவிக்கப்பட்ட சேதனப் பசளை அடங்கிய கப்பலை துறைமுகங்களுக்குள் உள் நுழைய முடியா வண்னம் தடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்தெ மனு மீதான பரிசீலனைகள் எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த மனுவில் பிரதிவாதிகளாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, விவசாய ராஜாங்க அமைச்சர் சஷீந்ர ராஜபக்ஷ, விவசாய பணிப்பாளர் நாயகம், தேசிய பசளைகள் செயலகத்தின் பணிப்பாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபை, பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM