(எம்.ஆர்.எம்.வசீம்)
மீண்டுமொரு கொவிட் அலை ஏற்படுவதை தடுத்துக்கொள்வதற்காக பின்பற்றவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் நான்கு பரிந்துரைகளை இலங்கை வைத்தியர் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு முன்வைத்திருக்கின்றது.
ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே வைத்தியர் சங்கம் குறித்த பரிந்துரைகளை தெரிவித்திருப்பதாக இலங்கை வைத்தியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொவிட்டை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்திருக்கும் சட்டங்கள் மற்றும் வரையறைகளை மேற்கொள்வதை மிகவும் சிறந்த கண்காணிப்பின் கீழ் உறுதியாக மேற்கொள்ளல், கொவிட்டை கட்டுப்படுத்தும் முன்னணி குழுவினருக்கு மூன்றாவது கொவிட் தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசி வழங்கவேண்டும், அத்துடன் கொவிட் தொற்று மிகவும் தீவிரமாக பரவும் நிலைமையில் நிகழ்வுகளை வரையறை செய்ய நடவடிக்கை எடுத்தல் மற்றும் கொவிட் தொற்று ஏற்பட்டிருக்கும் நபர்கள் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்டு தொடர்ச்சியாக கவனம் செலுத்தவேண்டும் என்ற 4 பரிந்துரைகளை முன்வைத்திருக்கின்றது.
அத்துடன் தனிமைப்படுத்தல் சட்டத்தை நீக்கி மக்கள் சாதாரணமாக செயற்படுவதற்கு அனுமதி வழங்கியதன் மூலம் மேலுமொரு கொரோனா அலை ஏற்படுவதற்கான அபாயம் இருக்கின்றது.
அதனால் மீண்டுமொரு கொவிட் அலை ஏற்படுவதை தடுப்பதற்காக, அனைத்து சந்தப்பங்களில் போல் அல்லாமல், இந்த சந்தர்ப்பத்தில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது மிகவும் அத்தியாவிசயமாகும் என்றும் இலங்கை வைத்தியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM